On the occasion of Poson Poya, the Dharma preaching organized by the Buddhist affairs section of Narammala Divisional Secretariat was conducted by Venerable Ududumbara Kasyapa Thero on 03.06.2023 at the premises of Pravachanalankara Piriven Temple, Narammala.
|
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
"பக்மஹா அசிரிய நாரம்மல 2023" 22.04.2023 அன்று நாரம்மல யூ.பி விஜய்கோன் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று, கிராமம் முழுவதும் ஓட்டம், சைக்கிள் பந்தயம், நாட்டுப்புற பாடல்கள், மல்யுத்தம், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு பந்தயம், கனாமுட்டி உடைத்தல், ஆண்றிற்கான இளவரசியை தேறிவு செய்தல், மற்றும் பல நாட்டுப்புற விளையாட்டுகள் இடம்பெற்றன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்குவது உட்பட பக்மஹா விழாவின் அனைத்து அனுசரணை நடவடிக்கைகளையும் நாரம்மல வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக சமூகம் பொறுப்பேற்றனர். கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இந்த பக்மஹா விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாரம்மல பொலிஸார், நீர் வழங்கல் சபை, பிரதேச சபை, விவசாய சேவை மையங்கள், வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேசத்தின் சகல அரச நிறுவனங்களும் இந்த பக்மஹா திருவிழாவில் கலந்துகொண்டனர்.
நாரம்மலை பிரதேச செயலக அதிகாரிகளின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் கலை விழாவான "பிரபாஸ்வர ரங்கசோபா" நிகழ்ச்சி 19.02.2023 அன்று காணி ஆணையாளர் நாயகம் திரு பந்துல ஜயசிங்க அவர்களின் தலைமையில், நாரம்மலை மயூரபாத மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
|
|
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
நாரம்மல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் வயது முதிர்ந்தோர் குழுக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய உணவு பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு ஏத்திவைப்பதட்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியானது 2023.03.31 அன்று நாரம்மல மயூரபாத இடை நிலை கல்லூரியின் மனையல் பொறியியல் பாடம் கற்கும் மாணவர்களின் பங்கேற்புடன் நாரம்மல புளத் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
"அழகான கிராமம்", ஒருங்கிணைந்த மனப்பான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது ரணாவத்த சேனநாயக்கா காலனியில் 16.02.2023 அன்று ரணாவத்த ஆரம்பப் பள்ளியில் மாவட்ட ஆலோசனை அலுவலர் திருமதி நந்தா மலானியின் வளப்பங்களிப்புடன் நடைபெற்றது. இதேவேளை தென்னை மரங்கள் பகிர்தளிக்கபட்டத்துடன், ரணாவத்தை ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |





























